Categories: இந்தியா

பிரதமர் மோடி, ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

Election2024: தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இரண்டாம் கட்டமாக நாளை 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் கடந்த சில நாட்களாக அனல் பறக்க நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் நிறைவு பெற்றது.

அப்போது பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனிடையே தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி காங்கிரஸை விமர்சித்தும், ராகுல் காந்தி பாஜகவை விமர்சித்தும் வருகின்றனர். இதில் குறிப்பாக சமீபத்தில் பிரதமர் மோடி காங்கிரஸை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இதற்கு ராகுல் காந்தியும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார். பிரதமரின் பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டங்களை பதிவு செய்தனர். இதன்பின் மதம், சாதி, சமூகம் மற்றும் மொழி அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சு பேசியதாக காங்கிரஸ் தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தது.

இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. அதேபோல் ராகுல் காந்தி மீதும் பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தது. இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரி அடிப்படையில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பதிலளிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோடீஸ் அனுப்பியுள்ளது.

ஏப்ரல் 29ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரும் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்சியின் நட்சத்திர பேச்சாளர் பேசும் பேச்சுக்கு கட்சி தலைவர்களே பொறுப்பு என்பதால் விளக்கமளிக்க நோடீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சம்பவம் செய்யும் வீர தீர சூரன்…வசூல் முதல் ஓடிடி அப்டேட் வரை!

சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில்…

39 minutes ago

சுங்கச்சாவடி கட்டண உயர்வு இன்று முதல் அமல்.! வாகன ஓட்டிகள் அதிருப்தி…

சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று, அதாவது (ஏப்ரல் 1) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. …

41 minutes ago

live : தமிழ்நாடு சட்டப்பேரவை முதல்…சுட்டெரிக்கும் வானிலை அப்டேட் வரை!

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும்…

1 hour ago

சுற்றுலா பயணிகளே கவனம்! கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்!

சென்னை : கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின்…

2 hours ago

மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் விண்வெளி செல்வீர்களா? சுனிதா வில்லியம்ஸ் சொன்ன பதில்!

ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS)…

3 hours ago

எதுக்கு ஓவர் கொடுக்கவில்லை? அஸ்வினி குமாருக்காக ஹர்திக் பாண்டியாவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

மும்பை :  ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…

3 hours ago