இன்று பீகார் சட்டசபை தேர்தல் பற்றி அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 29-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்பு அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டி உள்ளது.ஆனால், கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீடிப்பதால், தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று ராஷ்டிரீய ஜனதாதளம், லோக் ஜனசக்தி, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் கோரிக்கை விடுத்தது. ஆனால், தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் கமிஷன் ஏற்கனவே வெளியிடப்பட்டது.
தற்போது பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தள ஆட்சி வருகின்ற நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், 243 தொகுதியில் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தகவல் வெளியாகியது. இந்நிலையில் இன்று மதியம் டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்த இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சந்திப்பில் பீகார் சட்டசபை தேர்தல் பற்றி அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…