இன்று பீகார் சட்டசபை தேர்தல் பற்றி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

Default Image

இன்று பீகார் சட்டசபை தேர்தல் பற்றி அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 29-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்பு அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டி உள்ளது.ஆனால், கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீடிப்பதால், தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று ராஷ்டிரீய ஜனதாதளம், லோக் ஜனசக்தி, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் கோரிக்கை விடுத்தது. ஆனால், தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையம்  மறுத்துவிட்டது.  அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் கமிஷன் ஏற்கனவே வெளியிடப்பட்டது.

தற்போது பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தள ஆட்சி வருகின்ற நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், 243  தொகுதியில்  அக்டோபரில் சட்டசபை தேர்தல்  நடைபெறும் என்று தகவல் வெளியாகியது. இந்நிலையில் இன்று மதியம்  டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம்  பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்த இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சந்திப்பில் பீகார் சட்டசபை தேர்தல் பற்றி அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்