மேற்கு வங்கத்தில் உள்ள 108 மாநகராட்சிகளுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
மேற்கு வங்கத்தில் உள்ள 108 மாநகராட்சிகளுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 108 மாநகராட்சிகளுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 9ம் தேதி கடைசி நாள் என்றும், வேட்புமனுக்களை வாபஸ் பெற பிப்ரவரி 12ம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவித்த தேர்தல் ஆணையம், மார்ச் 8ம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக 48 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால், மம்தா பானர்ஜி மீண்டும் கட்சி தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக, கட்சியின் பொதுச் செயலர் பார்த்தா சட்டர்ஜி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…