5 மாநில தேர்தல் ஒத்திவைப்பா? – தேர்தல் ஆணையம் ஆலோசனை!

Published by
பாலா கலியமூர்த்தி

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷனுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை.

நாட்டில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சமயத்தில் கொரோனா பரவல் தொடர்பான ஒரு பொதுநல வழக்கில் ஒமைக்ரான் பரவலால் சட்டப்பேரவை தேர்தல்களை தள்ளிவைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது.

இதனையடுத்து, 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தள்ளிவைக்கப்படுமா என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஓமைக்ரான் அதிகரித்து வருவதால், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷனுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்துவது, கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல் கூறப்படுகிறது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கருத்து மற்றும் கொரோனா தொற்று, ஒமைக்ரான் அச்சுறுத்தல் உள்ளிட்டவைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

43 mins ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

9 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

21 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago