3-ம் கட்டமாக தேர்தல் தொடங்கியது..! நக்சலைட்டுகளின் அச்சுறுத்தலால் 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு.!

Default Image
  • ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • நக்சலைட்டுகள் அச்சுறுத்தல்  இருப்பதால்  12 தொகுதிகளில் மட்டும்  மாலை 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு.

ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது .அதில் இரண்டு கட்டங்களாக தேர்தல் முடிந்த நிலையில் இன்று 3-ம் கட்டமாக தேர்தல் தொடங்கி உள்ளது.

இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  வாக்குப்பதிவு காலை 7.00 மணிக்கு தொடங்கியது.  ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் அச்சுறுத்தல்  இருப்பதால்  12 தொகுதிகளில் மட்டும்  மாலை 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

மீதியுள்ள  ராஞ்சி, ஹதியா, காங்கே, ராம்கர் மற்றும் பர்கத்தா ஆகிய ஐந்து தொகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். மாநில அமைச்சர்கள் சிபி சிங், நீரா யாதவ்,  பாபு லால் மராண்டி உள்ளிட்ட  போட்டியிட்டு உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்