நக்சலைட்டுகளை ஒழிக்க காவல் பணியில்.. 8 மாத கர்ப்பிணி சிங்கப்பெண்..!

சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள தன்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகள் அதிக அளவில் உள்ளனர்.அவர்களை கட்டுப்படுத்த அரசு பல முயற்சி எடுத்து வருகிறது. ஆனாலும் அவர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.
நக்சலைட்டுகளை ஒழிக்க மாவட்ட ரிசர்வ் படையும் செயல்பட்டு வருகிறார்கள். இதில் பெண் கமாண்டோவாக சுனைனா பட்டேல் என்ற பெண் வேலை செய்து வருகிறார். அவர் தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இது குறித்து சுனைனா கூறுகையில் , நான் வேலையில் சேரும்போது 2 மாத கர்ப்பிணியாக இருந்தேன். எனது பணியை செய்ய ஒருபொழுதும் நான் மறுத்ததே இல்லை என கூறினார்.
இது குறித்து தன்டேவாடா எஸ்.பி. அபிஷேக் பல்லவ் கூறுகையில் , ஒரு முறை சுனைனா ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கர்ப்பம் கலைந்து போனது. ஆனாலும் அவர் பணியில் இருந்து செல்ல இன்றும் மறுப்பு தெரிவித்து வருகிறார் என கூறினார்.