எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் தூக்க மாத்திரையை உட்கொண்டு தற்கொலை முயற்சி!

Published by
லீனா

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக பணியாற்றி வருபவர்  என்.ஆர்.சந்தோஷ் தூக்க மாத்திரையை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக பணியாற்றி வருபவர்  என்.ஆர்.சந்தோஷ். கடந்த மே மாதம் 28ஆம் தேதி இவர் முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், அந்த நாள் முதற்கொண்டு எடியூரப்பா செல்லும் இடங்களுக்கு எல்லாம் சந்தோஷம் அழைத்துச் சென்று வந்துள்ளார். இவர் பெங்களூரில் டாலர்ஸ் காலனியில் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் முதல்வர் எடியூரப்பாவுடன், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். நேற்று காலையும் எடியூரப்பா உடன் இணைந்து நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். இதற்கிடையில், நேற்று இரவு 7 மணி அளவில் சந்தோஷ் தனது வீட்டில் உள்ள அவரது அறையில் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், உடனடியாக அவரை சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள எஸ்.எம்.எஸ் ராமையா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதற்கிடையே நேற்று இரவு முதல்வர் எடியூரப்பா எம்.எஸ்.ராமையா ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தோஷின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், சந்தோஷ் அதிக அளவில் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்துள்ளது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்று தெரியவில்லை  கூறியுள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!

கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…

8 minutes ago

NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…

35 minutes ago

2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!

ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…

1 hour ago

கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!

மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…

2 hours ago

முதல்ல ஏ.ஆர்.ரஹ்மான்..இப்போ அனிருத்…தொடர்ந்து பெரிய படங்கள் வாய்ப்பை தூக்கிய சாய் அபியங்கர்!

சென்னை : ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து கலக்கி கொண்டு இருந்த பாடகர் திப்புவின் மகனான சாய் அபியங்கர் காட்டில் மழை…

2 hours ago

முன்னாள் வீரரின் மிரட்டல் சாதனையை முறியடித்த தென்னாப்பிரிக்க இளம் வீரர்.!

பாகிஸ்தான் : பாகிஸ்தான் ஒருநாள் முத்தரப்பு தொடரின் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கும் இடையே இரண்டாவது போட்டி…

3 hours ago