பெங்களூரு கலவரம் குறித்து முதல்வர் எடியூரப்பா அவசர ஆலோசனை.
கர்நாடகாவின் புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாசமூர்த்தி. இவரது உறவினரான நவீன் என்பவர், தனது முகநூல் பக்கத்தில், இஸ்லாம் குறித்த அவதூறான கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். இவரது செயலால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்டோர், பெங்களூருவில் உள்ள எம்.எல்.ஏ சீனிவாசமூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில், டிஜே ஹள்ளி போலீஸ் நிலையம் எல்லையில் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து, அப்பகுதிதியில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தான் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, முதல்வர் எடியூரப்பா இன்று அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு முதல்வர் எடியூரப்பா வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வழிபாட்டு தலங்கள் அனைத்திற்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…