கர்நாடகாவில் பாதித்த மாவட்டங்களில் முதல்வர எடியூரப்பா இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
கர்நாடகாவில் ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்த மாத தொடக்கத்திலிருந்து கடலோர மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்கள், கனமழை விடாமல் பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதற்கிடையில் தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது.
இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள வடகர்நாடக மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்துள்ளார். அதன்படி, இன்று எடியூரப்பா மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக விமான நிலையத்தில் வைத்தே பெலகாவி மற்றும் தார்வார் மாவட்ட மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தவுள்ளார். அந்த 2 மாவட்டங்களில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
அதன் பின் ராணுவத்தின் ஹெலிகாப்டர் மூலம் மழையால் பாதித்த 3 மாவட்டங்களை மாவட்டங்களை மேற்பார்வையிடுகிறார்.
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…