ஹரியானாவில் கல்வி அமைச்சர் கன்வார் பாலுக்கு கொரோனா தொற்று உறுதி!

Default Image

ஹரியானாவில் கல்வி அமைச்சர் கன்வார் பாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டேதான் செல்கிறது. அதிலும் அரசியல்வாதிகள் அமைச்சர்கள் நடிகர்கள் பணம் படைத்தவர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் கொரானா தனது வீரியத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் ஹரியானாவில் உள்ள கல்வி அமைச்சர் கன்வர் பால் அவர்களுக்கு கடந்த இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், கடந்த சில நாட்களில் தன்னுடன் தொடர்பு தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்தும்மாறு கேட்டுக் கொண்டுள்ளார். தன்னிடம் தோன்றிய சில அறிகுறிகளுக்கு பிறகு அவர் சோதனை மேற் கொண்டதாகவும் அது தற்பொழுது நேர்மறையாக திரும்பி உள்ளதால் தயவு செய்து அருகில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தி கொள்ளுமாறும், சோதனை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்