Categories: இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 10 நாள் நீதிமன்ற காவல்.? நீதிமன்றத்தில் பரபரக்கும் வாதம்

Published by
மணிகண்டன்

Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையினரால் நேற்று டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். 9 முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராக காரணத்தால் நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி பின்னர் அமலாக்கத்துறையினர் கைது செய்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Read More – கெஜ்ரிவாலுக்கு மருத்துவ பரிசோதனை… இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு.!

கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி, பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தபட்டது. அதன் பிறகு அவரை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர்.

Read More – கெஜ்ரிவால் கைது..! வீட்டை சுற்றி 144 தடை.. டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் வாதிடுகையில், மதுபானக் கொள்கை முறைவேடு குற்ற சதிகளில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்கு வகிக்கிறார். முறைகேட்டில் ஈடுடப்பட்டு கிடைத்த பணத்தை கோவா சட்டப்பேரவை தேர்தலில் செலவழித்து உள்ளனர். எல்லா நேரங்களிலும் அப்போதைய துணை முதல்வர் மனீஷ் சிசோடியா உடன் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்பில் இருந்துள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே மணீஷ் சிசிடியா விசாரணையில் உள்ளார். எனவே அரவிந்த் கேஜ்ரிவாலிடம் விசாரணை நடத்துவதற்கு 10 நாட்கள் நீதிமன்ற காவல் தேவை என வாதிட்டனர்.

Read More – கைது செய்யப்பட்ட பின் கெஜ்ரிவால் கூறிய வார்த்தைகள்…

இதனை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர், இதனை சாதாரண பிடிவாரண்டு வழக்காக பார்க்க முடியாது. இந்த வழக்கில் ஜனநாயகத்தின் மிகப்பெரிய சிக்கல்கள் உள்ளன. அமலாக்கத்துறை வசம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக எந்தவித ஆதாரமும் இல்லை.

சட்டவிரோதமாக தன்னிச்சையாக அமலாக்கத்துறை இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது என கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார். இந்த வழக்கு விசாரணை தற்போது டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

Recent Posts

திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற விஜய்யின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் – சீமான்!

சென்னை :   தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…

20 minutes ago

உள்ள போகணுமா வேண்டாமா? ரசிகர்கள் கடுப்பான விக்ரம்!

சென்னை : சிக்கல்களை தாண்டி விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச்…

46 minutes ago

இது டிஜிட்டல் மயமாக்கம் அல்ல! ATM சேவைக்கான கட்டண உயர்வு…கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முடிவின்படி, வரும் மே 1, 2025 முதல், மாதாந்திர இலவச பரிவர்த்தனை…

2 hours ago

RRvsCSK : சேஸிங்கில் தொடர்ந்து சொதப்பும் சென்னை… தோல்வியில் இருந்து மீளுமா?

குவஹாத்தி : இன்று மார்ச் 30, 2025 அன்று நடைபெறவுள்ள ஐபிஎல் 2025 தொடரின் 11-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்…

2 hours ago

ரம்ஜான் பண்டிகை 2025 : களைகட்டிய ஆடுகள் விற்பனை…எவ்வளவு கோடிக்கு விற்பனை தெரியுமா?

சென்னை : ரம்ஜான் பண்டிகை வந்துவிட்டிட்டது என்றாலே ஆடுகள் விற்பனை என்பது அமோகமாக நடைபெறும். அதன்படியே இந்த ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு…

2 hours ago

SRHvDC : 300 அடிக்குமா ஹைதராபாத்? கடப்பாரை பேட்டிங்கின் அதிரடியை சமாளிக்குமா டெல்லி?

விசாகப்பட்டினம் : கடந்த ஆண்டு எப்படி அதிரடியாக ஹைதராபாத் அணி விளையாடியதோ அதைப்போல தான் இந்த சீஸனும் விளையாடி வருகிறது. உதாரணமாக…

3 hours ago