சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனுக்கு எதிர்ப்பு !சிபிஐ, அமலாக்கத்துறை புதிய மனு

Default Image

சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்துசெய்யக்கோரி  நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றதில் முறைக்கேடு நடந்ததாக சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம்  மீது புகார் இருந்து வருகிறது.இது தொடர்பாக வழக்குகளை பதிவு செய்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்தநிலையில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு, ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் சார்பில் மனு அளிக்கப்பட்டு இருந்தது.நேற்று விசாரணைக்கு வந்த இந்த மனுவில்,இருவருக்கும் முன் ஜாமீன் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும்  தெரிவிக்கப்பட்டது.

தற்போது  ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்துசெய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்