Categories: இந்தியா

இமயமலையில் விரைவில் நிலநடுக்கம்.? தயாராக இருங்கள்.. நிபுணர்கள் எச்சரிக்கை.!

Published by
செந்தில்குமார்

நேபாளத்தில் 6.4 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.32 மணியளவில் காத்மண்டு பகுதியில் இருந்து மேற்கில் 500 கி.மீ தொலைவில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், லாமிடாண்டா பகுதியில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டது.

இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து சுக்குநூறாகியுள்ளன. இதனால் இடிபாடுகளில் சிக்கி 132 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக 128 பேர் உயிரிழந்திருந்த நிலையில், தற்போது உயிரிழப்பு 132 ஆக உயர்ந்துள்ளது. இதில் பலர் காணாமல் போயுள்ள நிலையில் மீட்புபடையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக அஞ்சப்படுகிறது. இதற்கிடையில் நேபாளத்தின் மத்திய பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் எந்த நேரத்திலும் ஆபத்தை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்று நில அதிர்வு நிபுணர் எச்சரித்துள்ளார்.

வாடியா இன்ஸ்டிடியூட் ஆப் ஹிமாலயன் ஜியாலஜியில் பணிபுரிந்த நில அதிர்வு நிபுணரான அஜய் பால், நேபாளத்தின் டோட்டி மாவட்டத்திற்கு அருகில் உள்ள பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அக்டோபர் 3ம் தேதி நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களும் அதே பகுதியைச் சுற்றியே ஏற்பட்டதாகவும் கூறினார்.

நேபாளத்தின் நில அதிர்வு மண்டலம் தற்போது செயலில் உள்ளது. எனவே எப்போது வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்றும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அஜய் பால் எச்சரித்துள்ளார். மேலும் இமயமலைப் பகுதியை எப்போது வேண்டுமானாலும் பெரும் பூகம்பம் தாக்கும் என்று பல விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இமயமலை ஆனது சுமார் 40 முதல் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய டெக்டோனிக் தட்டு இந்தியப் பெருங்கடலில் இருந்து வடக்கே தள்ளப்பட்டு யூரேசியத் தட்டுடன் மோதி உருவானது. இந்திய டெக்டோனிக் தட்டு வடக்கு நோக்கி நகர்ந்து யூரேசிய தட்டுடன் மோதுவதால், இமயமலைக்கு அடியில் அழுத்தம் அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதனால் எட்டுக்கு மேல் ரிக்டர் அளவு கொண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் இமயமலையில் ஏற்படலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இருந்தும் இந்த பெரிய நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்பது சரியாக தெரியவில்லை.

Published by
செந்தில்குமார்

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

41 mins ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

46 mins ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

1 hour ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

13 hours ago