Categories: இந்தியா

இமயமலையில் விரைவில் நிலநடுக்கம்.? தயாராக இருங்கள்.. நிபுணர்கள் எச்சரிக்கை.!

Published by
செந்தில்குமார்

நேபாளத்தில் 6.4 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.32 மணியளவில் காத்மண்டு பகுதியில் இருந்து மேற்கில் 500 கி.மீ தொலைவில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், லாமிடாண்டா பகுதியில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டது.

இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து சுக்குநூறாகியுள்ளன. இதனால் இடிபாடுகளில் சிக்கி 132 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக 128 பேர் உயிரிழந்திருந்த நிலையில், தற்போது உயிரிழப்பு 132 ஆக உயர்ந்துள்ளது. இதில் பலர் காணாமல் போயுள்ள நிலையில் மீட்புபடையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக அஞ்சப்படுகிறது. இதற்கிடையில் நேபாளத்தின் மத்திய பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் எந்த நேரத்திலும் ஆபத்தை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்று நில அதிர்வு நிபுணர் எச்சரித்துள்ளார்.

வாடியா இன்ஸ்டிடியூட் ஆப் ஹிமாலயன் ஜியாலஜியில் பணிபுரிந்த நில அதிர்வு நிபுணரான அஜய் பால், நேபாளத்தின் டோட்டி மாவட்டத்திற்கு அருகில் உள்ள பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அக்டோபர் 3ம் தேதி நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களும் அதே பகுதியைச் சுற்றியே ஏற்பட்டதாகவும் கூறினார்.

நேபாளத்தின் நில அதிர்வு மண்டலம் தற்போது செயலில் உள்ளது. எனவே எப்போது வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்றும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அஜய் பால் எச்சரித்துள்ளார். மேலும் இமயமலைப் பகுதியை எப்போது வேண்டுமானாலும் பெரும் பூகம்பம் தாக்கும் என்று பல விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இமயமலை ஆனது சுமார் 40 முதல் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய டெக்டோனிக் தட்டு இந்தியப் பெருங்கடலில் இருந்து வடக்கே தள்ளப்பட்டு யூரேசியத் தட்டுடன் மோதி உருவானது. இந்திய டெக்டோனிக் தட்டு வடக்கு நோக்கி நகர்ந்து யூரேசிய தட்டுடன் மோதுவதால், இமயமலைக்கு அடியில் அழுத்தம் அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதனால் எட்டுக்கு மேல் ரிக்டர் அளவு கொண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் இமயமலையில் ஏற்படலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இருந்தும் இந்த பெரிய நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்பது சரியாக தெரியவில்லை.

Published by
செந்தில்குமார்

Recent Posts

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…

7 hours ago
இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!

இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!

டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…

8 hours ago
பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!

பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!

மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…

9 hours ago

வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்தனும்! இரட்டை சதம் விளாசி சொல்லிக்கொடுத்த கருண் நாயர்!

கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…

10 hours ago

ராமதாஸ் ரெடியா இருக்காரு…அடுத்து அன்புமணியிடம் பேச வேண்டும் -ஜி.கே.மணி!

சென்னை :  பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…

10 hours ago

நடிகர் ராஜேஷ் மறைவு…தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!

சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…

11 hours ago