மிசோரத்தில் கடந்த 9 மணி நேரத்தில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 08:02 மணிக்கு மிசோரத்தின் சம்பாய் நகரின் 31 கிலோமீட்டர் தென்மேற்கு பகுதியில் ரிக்டர் அளவில் 4.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதைத்தொடர்ந்து நேற்று இரவு மற்றொரு நடுக்கம் இரவு 11:03 மணியளவில் மிசோரத்தின் சாம்பாய் நகரின் 70 கி.மீ தென்கிழக்கு பகுதியில் ரிக்டர் அளவில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக மிசோரம் நிலநடுக்கத்தையும், நிலச்சரிவுகளையும் சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் 12 மணி நேரத்திற்குள் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக மிசோரம் முதல்வர் சோரம்தங்கா தெரிவித்தார். அதில், மிசோரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 04.16 மணியளவில் ஐஸ்வாலின் கிழக்கு-வடகிழக்கில் 25 கி.மீ தொலைவில் ரிக்டர் அளவுகோலில் 5.0 ரிக்டர் நிலநடுக்கம் பதிவானது.
பின்னர், திங்கள்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு தொடர்ந்து இரண்டாம் முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 எனப் பதிவாகியுள்ளது. கடந்த 9 மணி நேரத்தில் நடைபெற்ற 2 நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…