‘e-RUPI’ – புதிய திட்டத்தை இன்று அறிமுகம் செய்கிறார் பிரதமர் மோடி!

Published by
பாலா கலியமூர்த்தி

e-RUPI எனப்படும் மின்னணு பரிவர்த்தனை திட்டத்தை இன்று பிரதமர் மோடி அறிமுகபடுத்துகிறார்.

QR CODE அல்லது SMS மூலம் பயனாளிகளின் செல்போன்களுக்கே அனுப்பப்படும் e-RUPI எனப்படும் மின்னணு பரிவர்த்தனை திட்டத்தை இன்று பிரதமர் மோடி அறிமுகம் செய்யவுள்ளார். இந்த திட்டம் மின்னணு முறை மூலமாக மக்கள் நலத் திட்டங்களின் பயன்கள் எந்த இடையூறும் இல்லாமல் நேரடியாக மக்களுக்கு சென்று சேர உதவும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

e-RUPI மின்னணு பரிவர்த்தனை திட்டத்தை (National Payments Corporation) நிறுவனம், அதன் யுபிஐ தளத்தில் நிதி சேவைகள் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் தேசிய சுகாதார ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்டது என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

தாய் மற்றும் குழந்தைகள் நலத்திட்டங்கள், காசநோய் ஒழிப்பு திட்டங்கள், ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா, உர மானியங்கள் போன்ற திட்டங்களின் கீழ் மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து ஆதரவை வழங்கும் திட்டங்களின் கீழ் இந்த சேவைகளை வழங்கவும் இது பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும், தனியார் துறைகளும் தங்கள் ஊழியர் நலன் மற்றும் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த டிஜிட்டல் வவுச்சர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நிலையில் e-RUPI எனப்படும் மின்னணு பரிவர்த்தனை திட்டத்தை பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் அறிமுகப்படுத்துவார் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

43 minutes ago

சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…

2 hours ago

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

3 hours ago

உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…

4 hours ago

அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…

4 hours ago

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

5 hours ago