டூப்ளிகெட் சிம் மோசடி – 68 லட்சத்தை இழந்த வாடிக்கையாளர்!

Published by
Rebekal

டூப்ளிகேட் சிம்கார்டு பெற்ற நபர் 68 லட்சம் மோசடி செய்த நிலையில், சம்மந்தப்பட்ட சிம் கார்டு நிறுவனம் பாதிக்கப்பட்டவருக்கு 28 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

பெரும்பாலும் தற்பொழுது செல்போன் சிம்கார்டு நிறுவனங்கள் ஒரு மாதத்திற்கு அதிகமாக வாடிக்கையாளர்கள் தங்கள் சிம்கார்டை உபயோகப்படுத்தாமல் வைத்திருக்கும் பொழுது, அந்த சிம் கார்டை போலியாக தயாரித்து அந்த எண்ணை வேறொருவருக்கு கொடுத்து விடுகின்றனர். இதனால் பல சமயங்களில் பிரச்சனை ஏற்படவும் செய்கிறது. தற்பொழுதும்,  ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் நகரை சேர்ந்த கிருஷ்ண லால் என்பவருடைய செல்போன் சிம்கார்டு 2017 ஆம் ஆண்டு மே 25-ம் தேதியுடன் செயல்படாமல் இருந்துள்ளது.

இதனை அடுத்து அண்மையில், அந்த செல்போன் நிறுவனத்தை தொடர்பு கொண்ட கிருஷ்ணலால் தனக்கு அதே எண்ணில் புதிய சிம்கார்டை வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். அவருக்கும் அதே எண்ணில் புதியதாக சிம் கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு பின்பு ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஏற்கனவே ஆல்வார் நகரை சேர்ந்த பிரதாப் என்பவருக்கு கிருஷ்ண லாலின் செல்போனில் ஒரு டுப்ளிகேட் சிம் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சிம் கார்டு வைத்திருந்த பிரதாப், கிருஷ்ணரின் புதிய சிம் கார்டு ஆக்டிவேட் ஆனதும் அவரது வங்கிக் கணக்கிலிருந்து 68.5 லட்சத்தை எடுத்துள்ளார். இதற்காக கிருஷ்ணனின் சிம்கார்டுக்கு அனுப்பப்பட்ட ஓடிபி  பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து கிருஷ்ணலால் போலீசில் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளார். இதனை விசாரித்த போலீசார் அந்த செல்போன் நிறுவனம் கிருஷ்ண லாலின் எண்ணில் டுப்ளிகேட் சிம் கார்டு வழங்கி இருப்பதும், அதை பயன்படுத்தி தான் அவர் பணம் எடுத்துள்ளார் என்பதையும் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.

இதனை அடுத்து பிரதாப் கிருஷ்ணனுக்கு 44 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்துள்ளார். ஆனால் மீதமுள்ள 28.5 லட்சத்தை அவர் இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனை அடுத்து ராஜஸ்தான் அரசு தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலாளரும் தீர்ப்பு அதிகாரியுமாகிய அலோக் குப்தாவிடம் கிருஷ்ண லால் இது குறித்து புகார் அளித்துள்ளார். அதில், தனக்கு வரவேண்டிய மீதி தொகையை அதற்கான வட்டியுடன் சேர்த்து செல்போன் நிறுவனம் தருமாறு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து தீர்ப்பளித்துள்ள தீர்ப்பு அதிகாரி அலோக் குப்தா  கிருஷ்ண லாலின் வங்கி கணக்கில் ஒரு மாதத்திற்குள் 27.5 லட்சம் பணத்தை சம்மந்தப்பட்ட செல்போன் நிறுவனம் செலுத்த வேண்டும் எனவும், இல்லாவிட்டால் 10 சதவீத வட்டியுடன் அந்த தொகையை செலுத்த நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்! 

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…

41 minutes ago

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால்.  இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…

1 hour ago

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…

2 hours ago

“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!

சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…

2 hours ago

நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…

2 hours ago

அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…

3 hours ago