கேரளாவில் வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல்.! 8000 வாத்துகளை அழிக்க நடவடிக்கை.!

Published by
மணிகண்டன்

கேரளாவில் தற்போது பறவை காய்ச்சல் அதிகரித்து வருவதால் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. 

தற்போது கேரள மாநிலம் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கோட்டயம் பகுதி அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், அங்கு 1கிமீ சுற்றளவில் உள்ள பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 8000 வாத்துகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

கோட்டயம் மாவட்ட ஆட்சியர் பி.கே.ஜெயஸ்ரீஉத்தரவின் பேரில், கிராமப்புறங்களில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஊர்களில் 1 கிமீ சுற்றளவுக்கு உள்ள பாதிக்கப்பட்ட பறவைகளை அழிக்கவும், அதனை பத்திரமாக வெளியேற்றவும் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

டிசம்பர் 13 முதல் மூன்று நாட்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதித்த பகுதிகளில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் கோழி, வாத்து, பிற நாட்டுப் பறவைகள், முட்டை, இறைச்சி மற்றும் உரம் விற்பனை மற்றும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கதிற்கு மாறாக ஏதேனும் பறவைகள் இறந்தால் உடனடியாக மாநகராட்சிக்கு தகவல் கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

Published by
மணிகண்டன்

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

29 mins ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

35 mins ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

52 mins ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

1 hour ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

10 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

13 hours ago