கனமழையால் டெல்லியில் யமுனை நதியில் இதுவரை இல்லாத அளவுக்கு தண்ணீரின் அளவு உச்சவரம்பை எட்டியுள்ளது .
கடந்த சில நாட்களாக வடஇந்தியாவில் கனமழை கொட்டி தீர்த்து பல்வேறு மாநிலப்பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்கள் மழைநீர் புகுந்த இடங்களில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வரும் அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருகிறது.
டெல்லியில் கனமழை காரணமாகவும், ஹரியானா மாநிலத்தில் உள்ள அணையில் இருந்து நீர் அதிகளவில் வெயியேற்றப்படுவதாலும் யமுனை நதிக்கரையில் இரு பகுதிகளிலும் உச்சவரம்பு நிரம்பி வருகிறது.
நேற்று (புதன்கிழமை) இரவு 10 மணியளவில் யமுனை நதிக்கரையின் உச்சவரம்பு 208.05 மீட்டராக உயர்ந்தது, இது 1978க்கு பிறகு அதிகபட்ச அளவாகும். அந்த சமயம் 207.49 மீட்டர் வரை நிரம்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. கனமழை, யமுனை ஆற்றின் நீர் நிரப்புவது தொடர்பாக, மாநில துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முக்கிய அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…