நண்பா நாங்களும் உங்க ரத்த சொந்தம் தான் – நெகிழ வைக்கும் பாகிஸ்தான் நெட்டிசன்களின் ஹேஷ்டேக்!

Published by
Rebekal

இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு உதவுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் சமூக வலைத்தளம் மூலமாக #indianeedsoxygen எனும் ஹேஷ்டேக் மூலம்  நெட்டிசன்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், கடந்த வருடத்தை விட இந்த வருடம் கொரோனாவின் தாக்கம் அதிக அளவிலேயே காணப்படுகிறது. பாதிப்பு உச்சத்தை தொட்டு வரும் நிலையில், மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் தினமும் பாதிக்கப்படுவதுடன், ஆயிரத்துக்கும் அதிகமானோர் தினமும் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். மேலும்,  இந்தியாவில் உள்ள வட மாநிலங்கள் பலவற்றில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் மருத்துவமனையின் அத்தியாவசிய தேவைகள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவிற்கு ஆதரவாக இருக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அந்நாட்டு இணையவாசிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். எல்லையில்  பிரச்சனைகள் இருந்தாலும் அதை கருத்தில் கொள்ளாமல், #indianeedsoxygen எனும் ஹேஷ்டேக்குடன் சமூக வலைத்தளம் மூலமாக கோரிக்கை விடுத்தது வருகின்றனர் பாகிஸ்தான் சொந்தங்கள்.

மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவுக்கு உதவ நாங்கள் தயார் என பாகிஸ்தானில் செயல்படும் அப்துல் சத்தார் தன்னார்வ அமைப்பும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் பாகிஸ்தானியர்கள் நாங்க உங்கள் ரத்த சொந்தம் தான், நாங்கள் உங்களுடன் எப்பொழுதும் துணையாக இருப்போம் எனவும் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

47 minutes ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

1 hour ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

2 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

3 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

4 hours ago

பங்கு நானும் வரேன்.., ஏர்டெலை தொடர்ந்து ஜியோ-வின் ‘ஸ்டார்லிங்க்’ சம்பவம்!

டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …

5 hours ago