டெல்லியில் டி.எஸ் வசீர் உடல் சிதைந்த நிலையில் கண்டுபிடிப்பு..!

Published by
murugan

தேசிய மாநாட்டின் (NC) தலைவர் திரிலோச்சன் சிங் வஜீரின் உடல் இன்று டெல்லியில் கண்டுபிடிக்கப்பட்டது. 

ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் மற்றும் தேசிய மாநாட்டின் (NC) தலைவர் திரிலோச்சன் சிங் வஜீரின் உடல் இன்று டெல்லியில் கே.மோதி நகரில் உள்ள ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்  பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா ஆகியோருக்கு மிக நெருக்கமானவராக கருதப்பட்டார்.

இவர் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. டெல்லி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததால் குடும்பத்தினர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். அதே நேரத்தில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிய விசாரணையை தொடங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

டிஎஸ் வஜீரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த  ​தேசிய மாநாட்டின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சர்தார் டிஎஸ் வசீர் திடீர் மறைவு செய்தி கண்டு அதிர்ச்சியடைந்தேன். சில நாட்களுக்கு முன்பு தான் நாங்கள் ஜம்முவில் ஒன்றாக அமர்ந்திருந்தோம். நான் அவரை கடைசியாக சந்திப்பேன் என்று புரியவில்லை. அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.

Published by
murugan

Recent Posts

MI vs LSG: வெற்றி யாருக்கு.? லக்னோ அணியில் களமிறங்கிய மயங்க் யாதவ்.!

MI vs LSG: வெற்றி யாருக்கு.? லக்னோ அணியில் களமிறங்கிய மயங்க் யாதவ்.!

மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…

3 minutes ago

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…

2 hours ago

‘சச்செட்’ செயலி என்றால் என்ன? மன் கி பாத்தில் பிரதமர் மோடி இதை குறிப்பிட்டது ஏன்.?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…

2 hours ago

“பஹல்காம் தாக்குதல்… ரத்தம் கொதிக்கிறது” – பிரதமர் மோடி ஆவேசம்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: 10 பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு.!

காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…

4 hours ago

கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!

கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…

4 hours ago