கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் அனைத்து மாநில தலைநகரங்களிலும் 3 பகுதிகளாக நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி பணிகளில் பல நாடுகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.இதில் சில நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் நான்கு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எப்படி கொரோனா தடுப்பூசி எடுத்து செல்லப்படும்..? எப்படி பதப்படுத்தி வைக்கப்படும் அதன் பிறகு எந்த தேதியில், எந்த நேரத்தில் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும். தடுப்பூசி சரியான முறையில் நடக்க வேண்டும்.இதில் எந்தவித குழப்பமும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஆந்திரா, அசாம், குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளுக்கான முன்னோட்ட நடவடிக்கை நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.அனைத்து மாநில தலைநகரங்களிலும் 3 கட்டங்களாக கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்றும் மாநிலங்கள் தடுப்பூசி போட தயாராகுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…