குழந்தை அழுததால், போதையில் இருந்த தந்தை குழந்தையை தரையில் அடித்து கொன்ற சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபால்புரை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளது. தற்பொழுது நான்காம் குழந்தை பிறந்ததால், அந்த குழந்தைகளின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை தனது தந்தையுடன் அந்த மூன்று குழந்தைகள் வீட்டில் இருந்தனர். தந்தை மது போதையில் இருந்தார். அப்பொழுது ஒன்றரை வயதான மூன்றாம் குழந்தை சத்தமிட்டு அழுதுள்ளாள். இதனால் கோபமடைந்த தந்தை, குழந்தையை தரையில் தூக்கி அடித்துள்ளார். இதனால் அந்த குழந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளது.
உடனடியாக அந்த குழந்தையை அருகில் உள்ள சாக்கடையில் அக்குழந்தையின் உடலை தூக்கி எறிந்தார். மறுநாள் உடலை காண்ட துப்புரவு தொழிலார்கள், காவல் துறைக்கு தகவல் அளித்தனர். இந்நிலையில் இது தொடர்பாக விசாரித்தபொது, அந்த குழந்தையின் தந்தையே அடித்து கொன்றது தெரிய வந்தது.
இந்நிலையில் அவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனை நீரில் பார்த்த மற்ற இரண்டு குழந்தைகள், அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. தந்தையே குழந்தையை கொன்ற சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…