அழுத குழந்தையை கொன்ற குடிகார தந்தை!!

Default Image

குழந்தை அழுததால், போதையில் இருந்த தந்தை குழந்தையை தரையில் அடித்து கொன்ற சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபால்புரை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளது. தற்பொழுது நான்காம் குழந்தை பிறந்ததால், அந்த குழந்தைகளின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை தனது தந்தையுடன் அந்த மூன்று குழந்தைகள் வீட்டில் இருந்தனர். தந்தை மது போதையில் இருந்தார். அப்பொழுது ஒன்றரை வயதான மூன்றாம் குழந்தை சத்தமிட்டு அழுதுள்ளாள். இதனால் கோபமடைந்த தந்தை, குழந்தையை தரையில் தூக்கி அடித்துள்ளார். இதனால் அந்த குழந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளது.

உடனடியாக அந்த குழந்தையை அருகில் உள்ள சாக்கடையில் அக்குழந்தையின் உடலை தூக்கி எறிந்தார். மறுநாள் உடலை காண்ட துப்புரவு தொழிலார்கள், காவல் துறைக்கு தகவல் அளித்தனர். இந்நிலையில் இது தொடர்பாக விசாரித்தபொது, அந்த குழந்தையின் தந்தையே அடித்து கொன்றது தெரிய வந்தது.

இந்நிலையில் அவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனை நீரில் பார்த்த மற்ற இரண்டு குழந்தைகள், அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. தந்தையே குழந்தையை கொன்ற சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்