போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மீண்டும் ஒரு கன்னட நடிகையான சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னட திரைப்பட தயாரிப்பாளரும், பத்திரிக்கையாளருமான இந்திரஜித் லங்கேஷ் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் கன்னட திரையுலகில் உள்ள 15 நடிகை மற்றும் நடிகர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும், சிலர் போதை பழக்கம் உடையவர்கள் என்றும் குற்றம்சாட்டினார். அதனையடுத்து அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடர்ந்து ராகினி திவேத் மற்றும் சஞ்சனா கல்ராணிக்கு நேரில் ஆஜராக கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் ஆஜராகாத நிலையில் கடந்த வாரம் பெங்களூர் எலகங்காவில் உள்ள வீட்டில் வைத்து ராகினி திவேத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து தற்போது பிரபல நடிகையான நிக்கி கல்ராணியின் சகோதரியும், கன்னட த
நடிகையுமான சஞ்சனா கல்ராணியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதனையடுத்து பெங்களூர் இந்திரநகரில் உள்ள அவரது வீட்டிலிருந்து சஞ்சனா கல்ராணியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதுவரை போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் ராகினி திவேத் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…
சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…