போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மீண்டும் ஒரு கன்னட நடிகையான சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னட திரைப்பட தயாரிப்பாளரும், பத்திரிக்கையாளருமான இந்திரஜித் லங்கேஷ் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் கன்னட திரையுலகில் உள்ள 15 நடிகை மற்றும் நடிகர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும், சிலர் போதை பழக்கம் உடையவர்கள் என்றும் குற்றம்சாட்டினார். அதனையடுத்து அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடர்ந்து ராகினி திவேத் மற்றும் சஞ்சனா கல்ராணிக்கு நேரில் ஆஜராக கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் ஆஜராகாத நிலையில் கடந்த வாரம் பெங்களூர் எலகங்காவில் உள்ள வீட்டில் வைத்து ராகினி திவேத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து தற்போது பிரபல நடிகையான நிக்கி கல்ராணியின் சகோதரியும், கன்னட த
நடிகையுமான சஞ்சனா கல்ராணியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதனையடுத்து பெங்களூர் இந்திரநகரில் உள்ள அவரது வீட்டிலிருந்து சஞ்சனா கல்ராணியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதுவரை போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் ராகினி திவேத் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…