டிரைவர் இல்லா ரயில் சேவை – திறந்துவைக்கவுள்ளார் முதல்வர்!

Published by
Rebekal

நாட்டின் முதல் ஆளில்லா மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் இந்த மத இறுதியில் துவங்கிவைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ஜனக்புரியின் மேற்கு மற்றும் தாவரவியல் பூங்கா உள்ள மெஜந்தா பாதையில் நாட்டின் முதல் ஆள் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை இந்த மாதத்தின் இறுதியில் பிரதமர் மோடி அவர்களால் கொடியசைத்து துவங்கி வைக்கப்படும் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் டிரைவர் இல்லாத தங்களது மெட்ரோ ரயில் நாட்டின் முதல் ரயில் சேவையாக இருக்கும் எனவும், இது தற்பொழுது கொடியேற்றி துவக்கி வைக்க தயாராக உள்ளதாகவும், தங்களது சார்பில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2002ஆம் ஆண்டு மெட்ரோ தனது வணிக நடவடிக்கையினை முதல் முறை டெல்லியில் துவங்கிய பொழுது கிறிஸ்துமஸ் தினத்தன்று அப்போதைய பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் முதல் நீளத்தை திறந்து வைத்ததாகவும், தற்பொழுது நாளொன்றுக்கு 26 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்யக்கூடிய அளவிற்கு மெட்ரோ ரயில் சேவை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை மற்றும் மெஜந்தா மற்றும் பிங்க் பாதைகளில் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!

இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…

14 minutes ago

எங்கள் தலைவரை போல பேண்ட் சட்டை அணிந்து கொண்டு நடிக்கிறீர்கள்…முதல்வரை சாடிய ஆதவ் அர்ஜுனா !

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்,  கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா…

56 minutes ago

உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!

சென்னை :  தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…

1 hour ago

AFG vs ENG: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறப்போவது யார்? ஆப்கானிஸ்தான் பேட்டிங்…

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் பி பிரிவின் லீக் ஆட்டத்தில், லாகூரின் கடாபி மைதானத்தில்…

2 hours ago

“தவெக பண்ணையார்களுக்கான கட்சி இல்லை., 2026-ல் வரலாறு படைப்போம்!” – விஜய் பேச்சு.

காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரியில் நடைபெற்றது.…

2 hours ago

“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ” திமுக, பாஜகவை வச்சி செய்த விஜய்!

சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய தவெக…

2 hours ago