கொரோனா வைரஸ் பரவுவதிலிருந்து தற்காத்துக்கொள்ள பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங்,கோமியம் குடிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்ட வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது அதிவேகமாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது.இதன்காரணமாக,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிகையானது 4 லட்சத்திற்கும் அதிகமாகியுள்ளது.இதனால்,பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு போடப்படும் ரெம்டெசிவெர் உள்ளிட்ட தடுப்பூசி மருந்துகளின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்,உத்தரபிரதேசத்தின் பைரியாவைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.சுரேந்திர சிங்,கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள விரும்பினால் மக்கள் அனைவரும் பசுவின் கோமியம் குடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து சுரேந்திர சிங் வெளியிட்டுள்ள வீடியோவில்,”தினமும் காலை வெறும் வயிற்றில் பதஞ்சலியின் ‘கவ்முத்ரா’ என்ற பசு மாட்டின் கோமியத்தை தண்ணீரில் கலந்து இரண்டு அல்லது மூன்று டம்ளர் குடிக்க வேண்டும்.அதன்பின்னர் 30 நிமிடங்களுக்கு வேறு எதையும் உட்கொள்ள வேண்டாம்.இதனால்,கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.
அதுமட்டுமல்லாமல்,இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் பசுவின் கோமியம் ஒரு சிறந்த நிவாரணி”,என்று கூறினார்.
இதனையடுத்து,சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…