குடியரசு தலைவராக இன்று பதவியேற்கிறார் திரௌபதி முர்மு..! குடியரசு தலைவர் மாளிகையில் பிரமாண்ட வரவேற்பு..!

Default Image

குடியரசு தலைவராக பதவியேற்க உள்ள திரௌபதி முர்மு அவர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு அவர்கள், இன்று குடியரசு தலைவராக பதவியேற்க உள்ளார். இந்த நிலையில், அவருக்கு, ராம்நாத் கோவிந்த், குடும்பத்தினர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து திரௌபதி முர்மு அவர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. குதிரைப்படை வீரர்கள் புடை சூழ பதவி ஏற்பு விழாவுக்கு புறப்பட்டார்.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மைய மண்டபத்தில் குடியரசு தலைவர் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது 10.15 மணியளவில் நடைபெறும் விழாவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்