மதுபானங்களை வீடுகளுக்கே நேரடியாக விற்பனை செய்யும் வகையில் டெலிவரி வசதியை சத்தீஸ்கர் மாநில அரசு அறிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பெகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், சத்தீஸ்கரில் முழு ஊரடங்கு காலத்தில் மதுபானங்களை வீடுகளுக்கே நேரடியாக விற்பனை செய்யும் வகையில் டெலிவரி வசதியை சத்தீஸ்கர் மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மதுபானங்களை ஆர்டர் செய்ய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மது தேவையானோர் ஆர்டர் செய்தால் வீடுகளுக்கே மது வினியோகம் செய்யப்படும்.
ஒருவருக்கு 5 லிட்டர் மதுபானம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மதுபான விலைக்கு ரூ .100 கூடுதல் விநியோக கட்டணம் வசூலிக்கப்படும். காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த வசதி கிடைக்கும். மதுகடையின் 15 கி.மீ சுற்றளவில் இந்த வசதி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…