சமீப காலமாக இந்திய ராணுவ வீரர்களின் வாட்ஸ் அப்பை சில சமூக விரோதிகள் வேவு பார்ப்பதாக, உளவுத்துறை எச்சரித்து வந்தது. இந்நிலையில் ராணுவ வீரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ராணுவ வீரர்கள் தங்களது வாட்ஸ்அப் பயன்பாட்டை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், மேலும், சில உயர் அதிகாரிகளின் பேஸ்புக் கணக்கை முற்றிலுமாக நீக்கிவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் இந்திய ராணுவ வீரர் ஒருவரது வாட்ஸ்அப் நம்பர் ஆனது பாகிஸ்தானில் உள்ள ஒரு குரூப்பில் இவரது அனுமதி இல்லாமலே இணைக்கப்பட்டு இருந்தது. இதனை அறிந்த அந்த ராணுவ வீரர் அந்த குரூப்பை பற்றிய தகவலை மட்டும் எடுத்துக்கொண்டு அந்த குரூப்பில் இருந்து தன் நம்பரை வெளியேற்றினார். இதுகுறித்து மேலதிகாரியிடம் புகார் கூறியிருந்தார். இதேபோல் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ வீரர்களின் வாட்ஸ் அப்பை உளவு பார்க்கின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாகத்தான் உயர் ராணுவ அதிகாரிகள் சமூக வலைதள பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும் என ராணுவம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளதாம்.
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…
சென்னை : கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே அவருடைய படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் இசை எப்படி வரும் என்பது…
டெல்லி : 'ஒருகாலத்தில் எப்படி இருந்த பங்காளி' என நாம் கேள்விப்பட்ட பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் தற்போது தங்கள் விளையாட்டின்…
உத்திரபிரதேசம் : மாநிலம் காஜியாபாத்தின் லோனியில் உள்ள ட்ரோனிகா நகரில் சோனு என்பவருடைய மகன் தீபான்ஷூவுக்கு சனிக்கிழமை திருமணம் நடைபெறவுள்ளது.…
சென்னை : விக்ரம் நடித்துள்ள வீரதீரசூரன் திரைப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. முதல்போட்டியிலேயே பெங்களூர் அணியும், கொல்கத்தா அணியும் கொல்கத்தாவில் உள்ள…