2021-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். காந்தேரி கிராமம் அருகே 201 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,195 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவுள்ளது. டெல்லியிலிருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவதாகவும், உலகின் மிகப் பெரிய தடுப்பூசி திட்டத்திற்கு இந்தியா தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.
2021-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்திற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தடுப்பூசி நாட்டின் அனைத்து இடங்களுக்கும் சென்றடைய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த 2020 ஆம் ஆண்டு நமக்கு பல்வேறு விஷயங்களை கற்றுக் கொடுத்தது. இது சவால்கள் நிறைந்த ஆண்டாகும்.
நாட்டின் முன்னணி கொரோனா சுகாதார பணியாளர்களை நினைவில் கொள்வதற்கு ஆண்டின் கடைசி நாள் இதுவாகும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்போது பல்வேறு வதந்திகள் பரவ வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார். தனிப்பட்ட லாபங்களுக்காக சில நபர்கள் பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…