கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு வெண்டிலேட்டர்களை தந்து உதவி செய்வோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையை அளிக்கிறது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85,940 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 2,752 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் குணமடைந்து 30,153 பேர் வீடு திரும்பி உள்ளனர்.
சமீபத்தில் இந்தியா கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் நிலையில் அமெரிக்கா 3.6 மில்லியன் டாலர்கள் அதாவது (ரூ.27 கோடி ) கொடுப்பதாக அறிவித்தது. இந்நிலையில், இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு வெண்டிலேட்டர்களை கொடுத்து உதவி செய்வோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் மோடி, தனக்கு மிகவும் நல்ல நண்பர். கொரோனாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் வழங்கப்படும். கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் என்ற எதிரியை வீழ்த்த இந்தியாவிற்கு அமெரிக்கா உறுதுணையாக நிற்கும் எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…