உத்திரப்பிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் பலியான சிறுமியின் உடலை நாய் நக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து 2 ஊழியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர.
உத்திரப்பிரதேசத்தின் சம்பால் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் விபத்தில் பலியான 15வயது சிறுமியின் உடலை நாய் நக்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.அந்த மருத்துவமனையின் மேல் மாடியில் பலியான சிறுமியின் உடலை நாய் நக்கும் வீடியோ வியாழக்கிழமை அன்று சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து,அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சுஷில் வர்மா இந்த வழக்கு மிகவும் தீவிரமானது என்று கூறியதுடன் ,இது தொடர்பாக வார்ட்பாய் மற்றும் ஒரு துப்புரவாளர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார் .
அதனுடன் இந்த வழக்கு தொடர்பாக மருத்துமனையின் மருத்துவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் சுஷில் அறிவித்தார் .மேலும் இது குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் , அனைத்து குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.விபத்தின் போது சம்பவ இடத்திலேயே பலியான சிறுமியின் தந்தை செய்தியாளர்களிடம் கூறிய போது , மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று குற்றம்சாட்டி உள்ளார் . சிறுமியின் தந்தை அம்ரோஹா மாவட்டத்தில் வசிக்கும் சரண் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…