உ.பி-யில் பலியான சிறுமியின் உடலை நாய் நக்கும் வீடியோ.! 2 மருத்துவமனை ஊழியர்கள் சஸ்பென்ட்.!

Default Image

உத்திரப்பிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் பலியான சிறுமியின் உடலை நாய் நக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து 2 ஊழியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர.

உத்திரப்பிரதேசத்தின் சம்பால் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் விபத்தில் பலியான 15வயது சிறுமியின் உடலை நாய் நக்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.அந்த மருத்துவமனையின் மேல் மாடியில் பலியான சிறுமியின் உடலை நாய் நக்கும் வீடியோ வியாழக்கிழமை அன்று சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து,அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சுஷில் வர்மா இந்த வழக்கு மிகவும் தீவிரமானது என்று கூறியதுடன் ,இது தொடர்பாக வார்ட்பாய் மற்றும் ஒரு துப்புரவாளர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார் .

அதனுடன் இந்த வழக்கு தொடர்பாக மருத்துமனையின் மருத்துவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் சுஷில் அறிவித்தார் .மேலும் இது குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் , அனைத்து குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.விபத்தின் போது சம்பவ இடத்திலேயே பலியான சிறுமியின் தந்தை செய்தியாளர்களிடம் கூறிய போது , மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று குற்றம்சாட்டி உள்ளார் . சிறுமியின் தந்தை அம்ரோஹா மாவட்டத்தில் வசிக்கும் சரண் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Black paint DMK
sajjan kumar
Match abandoned due to rain
Wasim Akram
GK Mani home wedding ceremony - Jason sanjay - Vijay sethupathi - Tamilnadu CM MK Stalin
tvk vijay ntk seeman