பழிக்குப் பழி;இரண்டு மர்ம நபர்களால் 5 முறை சுட்டுக்கொல்லப்பட்ட டாக்டர் தம்பதியினர்…!

Published by
Edison

ராஜஸ்தானின்,பரத்பூர் அருகே காரில் சென்ற டாக்டர் தம்பதியினர், இரண்டு மர்ம நபர்களால் 5 முறை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் வசிக்கும் டாக்டர் சுதீப் குப்தா மற்றும் அவரது மனைவி டாக்டர் சீமா குப்தா ஆகிய இருவரும் தீபா என்ற 25 வயது பெண் மற்றும் அவரது 6 வயது மகன் ஆகியோரைக் கொன்ற வழக்கில் 2019 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டனர்.அதன்பின்னர்,தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்நிலையில்,டாக்டர் சுதீப் குப்தா மற்றும் அவரது மனைவி டாக்டர் சீமா குப்தாவும்,நேற்று தங்கள் காரில் பரத்பூர் அருகே சென்று கொண்டிருந்தபோது,திடீரென்று பைக்கில் வந்த இருவர் அவர்கள் சென்ற காரை வழிமறித்துள்ளனர். பின்னர்,அவர்களை நோக்கி ஐந்து முறை சுட்டுவிட்டு இருவரும் தப்பிச் சென்றனர்.இதற்கிடையில்,டாக்டர் தம்பதியினர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பரத்பூரின் நீம்தா கேட் பகுதியில் இருந்த போக்குவரத்து சிசிடிவி கேமராவில் பதிவாகியது.அதனைக் கொண்டு,தாக்குதல் நடத்தியவர்கள் இருவரும்,டாக்டர் தம்பதியினரால் 2019 ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட தீபாவின் சகோதரர் மற்றும் உறவினர் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து,அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Published by
Edison

Recent Posts

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

1 hour ago

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…

2 hours ago

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…

2 hours ago

பாகிஸ்தான் அதிகாரியின் ‘கழுத்தறுப்பு’ சைகையால் வெடித்த சர்ச்சை! வைரலாகும் வீடியோ…

லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

3 hours ago

திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…

4 hours ago

Live : தவெக பூத் கமிட்டி மாநாடு முதல்… இந்தியா – பாகிஸ்தான் எல்லை பதற்றம் வரை…

சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…

4 hours ago