Categories: இந்தியா

உங்க வீட்டிற்கு சூரிய மின்சாரம் வேண்டுமா? SBI கடனுதவி.! முழு விவரம்…

Published by
கெளதம்

நாம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்க, எஸ்பிஐ வங்கி கடனுதவி வழங்குகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் எவ்வாறு பெற வேண்டும் என பார்க்கலாம்.

அதாவது, மத்திய அரசின் பிரதம மந்திரி சூர்யா கர் திட்டத்தின் கீழ், சோலார் மின் உற்பத்திக்கு கடனுதவி வழங்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, 3 KW வரை சோலார் பேனல் அமைக்க ரூ.2 லட்சம், 3 KW முதல் 10 KW வரை சோலார் பேனல் அமைக்க ரூ.6 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

MNRE/REC இணையதளத்தில் விண்ணப்பதாரர் பதிவு செய்வது முதல் கடன் வழங்குவது வரை, SBI அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறியலாம். இந்த கடனுக்கு முதலில் https://www.pmsuryaghar.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அது நிறைவடைந்த பிறகு https://www.jansamarth.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வழங்கும் கடன் தொகை

  • 3 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூரை  சோலார் பேனலை அமைக்க ரூ.2,00,000 வழங்கப்படுகிறது.
  • 3 KW க்கும் அதிகமான மற்றும் 10 KW திறன் கொண்ட மேற்கூரை சோலார் பேனலை அமைக்க ரூ.6,00,000 வழங்கப்படுகிறது.

இந்த கடனுக்கு வட்டி விகிதம் என்ன?

  • ​​3 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூரை  சோலார் பேனல் நிறுவுவதற்கு (ரூ.2 லட்சம்) கடன் என்றால் 7% ஆகும்.
  • 3 KW-க்கு மேல் மற்றும் 10 KW வரை சோலார் மேற்கூரை பேனல் நிறுவுவதற்கு (ரூ.6 லட்சம்) கடன் என்றால் 10.15% ஆகும்.

விண்ணப்பிக்க தகுதி

  1. விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
  2. சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு ஏற்ற கூரையுடன் கூடிய வீடு சொந்தமாக இருக்க வேண்டும்.
  3. வீட்டில் சரியான மின் இணைப்பு இருக்க வேண்டும்.
  4. சோலார் பேனல்களுக்கு குடும்பம் வேறு எந்த மானியத்தையும் பெற்றிருக்கக் கூடாது.
  5. கடன் தொகை பெருவதற்கு PAN எண் கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

  • வங்கியின் இணையதளமான bank.sbiஐப் பார்வையிடுவதன் மூலம், கடன்களின் கீழ், தயவுசெய்து SBI சூர்யா கர் திட்டத்திற்குச் சென்று, இப்போதே விண்ணப்பிக்கவும்.
  • இல்லையெனில், நீங்கள் முதலில் https://pmsuryaghar.gov.in இல் விண்ணப்பிக்கலாம் பதிவு செய்யலாம், பின்னர் https://www.jansamarth.in இல் விண்ணப்பிக்கலாம்.
Published by
கெளதம்

Recent Posts

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…

25 minutes ago

‘சச்செட்’ செயலி என்றால் என்ன? மன் கி பாத்தில் பிரதமர் மோடி இதை குறிப்பிட்டது ஏன்.?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…

60 minutes ago

“பஹல்காம் தாக்குதல்… ரத்தம் கொதிக்கிறது” – பிரதமர் மோடி ஆவேசம்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…

1 hour ago

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: 10 பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு.!

காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…

2 hours ago

கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!

கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…

3 hours ago

‘விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவையும் நான் மூடினேன்’ – திருமாவளவன்.!

திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…

4 hours ago