யார் நினைவாக ஹோலி கொண்டாட கொண்டாடுகிறோம் தெரியுமா உங்களுக்கு…?

Published by
murugan

 ஹோலி அல்லது அரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும் இந்து மக்கள் வாழும் நாடுகளிலும் இந்த பண்டிகை கொண்டப்படுகிறது. 

இந்த முக்கிய நாளில் மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசிக்கொண்டு கொண்டாடுகின்றனர். அந்த நாளுக்கு முன்னதாக பெரிய நெருப்புகளை மூட்டுவார்கள். இது ஹோலிகா தகனம் அல்லது சோட்டி ஹோலி எனவும் அழைக்கப்படும்.

ஹோலிப் பண்டிகை குளிர் காலத்தின் இறுதியில் பங்குனி (பிப்ரவரி ,மார்ச்) மாதத்தின் கடைசி முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகின்றது.

ஹோலி கொண்டாட காரணம் இதுதான்:

 இரண்யகசிபு என்ற  அரசன் இருந்தான். இவனுக்கு பிரம்மா தந்த வரத்தால் இவனை யாராலும் கொல்ல முடியவில்லை. அந்த வரம் இவனது பெருந்தவத்தால் கிடைத்தது. இந்த வரத்தை கொண்டு இவனை இரவிலோ, பகலிலோ ,வீட்டிலோ, வெளியிலோ , மண்ணிலோ கொல்ல முடியாது.

இதனால் இவன் எந்த கடவுளைத் தொழாமல் தன்னை வழிபட வேண்டும் என ஆணையிட்டான்.இவனது மகன் பிரகலாதன் திருமாலின் பக்தன். இரண்யகசிபு பல தடவை அச்சுறுத்தியும், பிரகல்லாதன் திருமலை வழிபடுவதை விடவில்லை. பிரகல்லாதனுக்கு நஞ்சூட்டினாலும் அது அவன் வாயில் தேனாகியது. யானைகளால் தக்கியபோதும் காயமில்லாமல் தப்பினான்.

பாம்புகளுக்கு இடையில் பசியோடு பிரகல்லாதனை ஒரு அறையில் தனியாக அடைத்தபோதும் உயிரோடு இருந்தான். தன் மகனைக் கொல்ல இரண்யகசிபு எடுத்த அனைத்து  முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. பின்னர் பிரகல்லாதனை அவனது தங்கை (ஹோலிகா) மடியில் அமரச் செய்து தீயில் இருக்க ஆணையிட்டான்.

 அவள் தங்கை(ஹோலிகா) அணிந்துஇருந்த துப்பட்டா( மாயப் போர்வை) . பிரகல்லாதன் திருமாலை வழிபட தீப்பற்றி எரியத் தொடங்கியதும் தங்கையின் சால்வை பறந்து பரகல்லாதனை மூடிக்கொண்டது. இதனால் ஹோலிகா தீயில் இறந்தாள் பிரகல்லாதன் மட்டுமே தப்பித்தான் , இந்த  காட்சியைக் கண்டு மக்கள் வியந்தனர்.  ஓலிகா எரிந்த நிகழ்வே ஹோலியாகக் கொண்டாடப்படுகிறது.

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

14 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

15 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

16 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

16 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

16 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

16 hours ago