ஆந்திராவில் கழுதை இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெறுவதற்கான காரணம் என்ன தெரியுமா?

Published by
Rebekal

மற்ற மாநிலங்களில் இருந்து கழுதைகள் கடத்தப்பட்டு ஆந்திராவில் அதிக அளவில் இறைச்சி விற்பனை நடைபெறுவதற்கு காரணம் கழுதை இறைச்சி உடலுறவு இயக்கத்தை அதிகப்படுத்தும் என அங்குள்ள மக்கள் நம்புகின்றனராம்.

ஆந்திர மாநிலத்தில் கழுதை இறைச்சி விற்பனை சில சந்தைகளில் அமோகமாக நடைபெற்று வருகிறதாம். மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக ஆந்திராவுக்கு கழுதைகள் கடத்தப்பட்டு கிருஷ்ணா, மேற்கு கோதாவரி மற்றும் பிரகாஷம் ஆகிய ஆந்திராவில் உள்ள சில மாவட்டங்களில் உள்ள சந்தைகளில் அமோகமாக விற்பனை நடைபெற்று வருகிறதாம். 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலும் ஒரு கழுதையை விலை கொடுத்து வாங்க முடியுமாம். அந்த அளவுக்கு ஆந்திராவில் கழுதை இறைச்சி விற்பனை அதிகளவில் காணப்படுகிறது.

ஒரு கிலோ இறைச்சி வாங்க வேண்டுமானால் 600 ரூபாய் செலவிட வேண்டும். ஆந்திராவில் உள்ள உள்ளூர் வழக்கப்படி கழுதை இறைச்சியை பூப்பி என்றுதான் கூறுகிறார்கள். பெரும்பாலும் வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் தான் ஆந்திராவில் கழுதை இறைச்சி விற்பனை அதிகளவில் நடைபெறுகிறதாம். ஆனால், 2011 ஆம் ஆண்டு விலங்கு உணவு சட்டங்கள் அறிவிக்கப்பட்டபோது கழுதை இறைச்சி அதில் சேர்க்கப்படவில்லையாம். எனவே இது விலங்குகளுக்கான படுகொலை எனவும், சட்டவிரோதமான செயல் எனவும் தான் கருதப்படுகிறதாம்.

மேலும் கழுதை இறைச்சி சாப்பிடுவதனால் பல நன்மைகள் கிடைக்கும் எனும் மூடநம்பிக்கைகளும் அங்கு உள்ள மக்களிடையே அதிகம் பரவிக் காணப்படுகிறதாம். பண்டைய வழக்கப்படி கழுதை இறைச்சி அதாவது பூப்பி என்று அழைக்கப்படக்கூடிய இந்த இறைச்சி சாப்பிடுவதால் உடலில் தனிப்பட்ட வீரியம் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் உடலுறவு இயக்கத்திற்கு இந்த கழுதை இறைச்சி மிகவும் உதவும் எனும் ஒரே நம்பிக்கையால் தான் அதிக அளவில் ஆந்திராவில் இந்த கழுதை இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருகின்றனவாம். இப்படியே போனால் வருங்காலத்தில் கழுதைகளை உயிரியல் பூங்காக்களில் மட்டுமே காண முடியும் என அனிமல் ரெஸ்கியூ ஆர்கனைசேஷனின் செயலாளர் கோபால் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

25 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

28 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

59 mins ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

1 hour ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

1 hour ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

3 hours ago