Pulasa fish [File Image]
ஆந்திரப் பிரதேசம் : மாநிலத்தில் உள்ள அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் மீன் ஒன்று பெரிய விலைக்கு விற்பனையான சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சக்கினேடிபள்ளி மண்டல் அப்பனா ராமுனி லங்கா, கெஜின்னரா எதிரே உள்ள செங்கழுநீர் கோதாவரியில் மீனவர் வலையில் புலசா மீன் ஒன்று பிடிபட்டது.
பொதுவாகவே இந்த மீன் அதனுடைய எடைக்கு தகுந்தபடி, பெரிய விலைக்கு விற்பனை செய்யப்படுவதை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். அப்படி தான், தற்போது செங்கழுநீர் கோதாவரியில் மீனவர் வலையில் சிக்கிய ஒரு மீன் பெரிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த புலசா மீன் அந்த பகுதியில் ஏலத்தில் விடப்பட்டது.
ஏராளமானோர் போட்டியிட்ட இந்த ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் சர்பஞ்ச் பேரே ஸ்ரீனு அப்பனா ராமுனி ரூ.24,000 கொடுத்து மீனை வாங்கினார். இவ்வளவு விலை கொடுத்து இந்த மீனை எதற்காக வாங்குகிறார்கள் என்ற கேள்வி உங்களுடைய மனதில் வருவதுஎங்களுக்கு புரிகிறது.
இந்த புலசா மீன் மிகவும் சுவையாக இருப்பதன் காரணமாக இந்த அளவு விலைக்கு விற்பனை ஆகிறது. இந்த வகை மீனில் ஒமேகா-3 நிறைந்து இருக்கிறது. இது நமது கண்களுக்கும் சருமத்திற்கும் நல்லது. எனவே, இதன் காரணமாக இந்த மீன்களை மக்கள் விரும்பி வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள்.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…