5 சதவீதம் தெரியுமா? செய்தியாளர்களிடம் 5 விரலை காட்டிச் சென்ற சிதம்பரம்

Default Image

5 சதவீதம் தெரியுமா? செய்தியாளர்களிடம் 5 விரலை காட்டிச் சென்றுள்ளார்  சிதம்பரம்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான சிதம்பரம் கைது செய்யப்பட்டு தற்போது  சிபிஐ காவலில் உள்ளார்.


நேற்று சிதம்பரத்துக்கு சிபிஐ காவல் முடிந்த நிலையில் மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது அவரது சிபிஐ  காவல் செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த நிலையில் சிதம்பரத்திடம் இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு சிதம்பரம் உள்நாட்டு உற்பத்தி 5 சதவீத அளவிற்கு வீழ்ச்சி அடைந்து விட்டதை ‘5 சதவீதம்’என்று தனது சைகையில் தெரிவித்தார் .அதாவது  5 சதவீதம் தெரியுமா? உங்களுக்கு 5 சதவீதம் என்றால் என்ன நினைவிற்கு வருகிறது என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.சிதம்பரம் இவ்வாறு கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்