கிருமிநாசினி தெளிக்கப்பட்ட சுரங்கபாதைகளை பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரானா வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா கிருமி நாசினி தெளிக்கக்கூடிய சுரங்க பாதைகளின் பயன்பாட்டை தவிர்க்குமாறு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் பஞ்சாப்பை சேர்ந்த குரு சிம்ரன் சிங் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கிருமி நாசினி தெளிக்க கூடிய சுரங்கத்தின் பயன்பாடு மருத்துவ ரீதியாகவும் மனோரீதியாகவும் தீங்கை விளைவிக்கும் என கூறியுள்ளார்.
மேலும் இதனை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது என வாதிட்டுள்ளார். இதனை ஏற்று நீதிபதிகள் தீங்கை விளைவிக்கும் என்றால் ஏன் அதை தடை செய்யவில்லை? என கேள்வி எழுப்பினர். மேலும் கிருமி நாசினி தெளிக்க கூடிய சுரங்கங்களின் பயன்பாட்டை தடுக்க புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…