இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருவதால், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்றும், வெளியே செல்பவர்கள் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக வைரஸ் தொற்று கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு இடங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகிறது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்த கட்டடங்கள் ஆகியவற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் தமிழகம் உட்பட சில இடங்களில் கிருமிநாசினி சுரங்கம் என்ற பெயரில் பாதை அமைக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் மனிதர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், தனி நபர்கள், குழுக்கள் மீது எந்த சூழ்நிலையிலும் கிருமி நாசினி தெளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், ரசாயனம் கலந்த கிருமி நாசினிகளை தெளிப்பதால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
ஆந்திரப்பிரதேசம் : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரனும் இப்பொது தெலுங்கு திரையுலகில்…