மனிதர்கள் மீது கிருமி நாசினி தெளிக்கக் கூடாது : மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருவதால், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்றும், வெளியே செல்பவர்கள் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக வைரஸ் தொற்று கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு இடங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகிறது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்த கட்டடங்கள் ஆகியவற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் தமிழகம் உட்பட சில இடங்களில் கிருமிநாசினி சுரங்கம் என்ற பெயரில் பாதை அமைக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் மனிதர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், தனி நபர்கள், குழுக்கள் மீது எந்த சூழ்நிலையிலும் கிருமி நாசினி தெளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், ரசாயனம் கலந்த கிருமி நாசினிகளை தெளிப்பதால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர் தின ஸ்பெஷல் : ஒரே நாளில் வெளியாகும் 10 திரைப்படங்கள்!
February 12, 2025![TAMIL MOVIES](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TAMIL-MOVIES.webp)
சாதனை கனவாக போனது… வெறும் 1 ரன்னில் அவுட்! வந்த வேகத்தில் திரும்பிய ரோஹித் ஷர்மா.!
February 12, 2025![RohitSharma](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/RohitSharma.webp)
INDvENG : டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு! பேட்டிங் களத்திற்கு தயாரான இந்தியா!
February 12, 2025![INDvENG 3rd ODI ENG won the toss](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/INDvENG-3rd-ODI-ENG-won-the-toss.webp)