“வெற்றி கொண்டாட்டம் வேண்டாமே” – மே.வங்க அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்…!

Published by
Edison

மேற்கு வங்க இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் போது அல்லது அதற்குப் பிறகு வெற்றி கொண்டாட்டம் கூடாது என்பதை உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையம் மேற்கு வங்க அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

கடந்த மே மாதம் நடைபெற்ற மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியுற்றார்.இந்த சூழலில் மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவி ஏற்று 6 மாதத்துக்குள் எம்எல்ஏவாக பதவி ஏற்க வேண்டும் இல்லாவி்ட்டால் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும்.

அதற்கேற்ப,பவானிபூர் எம்எல்ஏ சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதனால்,பவானிபூர் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு,அத்தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். பவானிபூர் தொகுதியில் பாஜக சார்பில் பிரியங்கா டிப்ரிவால் களமிறக்கப்பட்டார்.இதற்கு முன் இருமுறை பவானிபூரில் போட்டியிட்டு மம்தா வென்றுள்ளார்.

இதனையடுத்து,செப்.30-ம் தேதி பவானிபூர் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதே சமயத்தில் ஜங்கிபூர் மற்றும் சமஸ்ர்கஞ் ஆகிய தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து,அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

அதன்படி,19 வது சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு 52,017 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா முன்னிலையில் உள்ளார்.இதனையடுத்து கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் குடியிருப்புக்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் ஆட்டம் பாட்டத்துடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.மேலும்,ஜங்கிபூர் மற்றும் சமஸ்ர்கஞ் ஆகிய தொகுதிகளிலும் திரிணாமூல் கட்சி முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில்,கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் போது அல்லது அதற்குப் பிறகு வெற்றி கொண்டாட்டமோ,ஊர்வலமோ நடைபெறக் கூடாது என்பதை உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையம் மேற்கு வங்க அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய வன்முறை நடக்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கும்படியும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

Recent Posts

LIVE: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு முதல் சாதனை செய்த இளையராஜா வரை!

LIVE: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு முதல் சாதனை செய்த இளையராஜா வரை!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…

17 minutes ago

பாஜகவுடைய ஏவலால் பல கட்சிகள் நம்மளை குறைகூறுகிறார்கள்! அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!

சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…

38 minutes ago

வடசென்னை 2 வருது…வருது! மாற்றி மாற்றி பேசும் வெற்றிமாறன்…டென்ஷனில் ரசிகர்கள்!

சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…

2 hours ago

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு! தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனை பற்றி பேச எதிர்க்கட்சிகள் திட்டம்!

டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…

2 hours ago

அமெரிக்கா நம்மளை அடக்கி ஆள விரும்புகிறது…கனடாவின் புது பிரதமர் மார்க் கார்னி பேச்சு!

ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…

2 hours ago

கோப்பையை வென்ற இந்தியா..ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வா? ரோஹித் சொன்ன பதில்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.…

3 hours ago