டெல்லி:மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
டெல்லி தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில்,பிரம்மாண்டமாக திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும்,முதலமைச்சருமான ஸ்டாலின் அவர்கள்,3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
தலைவர்களுக்கு அழைப்பு:
இதனையடுத்து,பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து திமுக அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
திமுக அலுவலகம் இன்று திறப்பு:
இந்நிலையில்,டெல்லியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகம் இன்று திறக்கப்படுகிறது.இன்று மாலை 5 மணியளவில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்,திமுக அலுவலகத்தை(அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை) திறந்து வைக்கிறார்.அதன்பின்னர் அண்ணா, கலைஞர் ஆகியோரது சிலைகளையும்,பேராசிரியர் அன்பழகன் பெயரிலான நூலகத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இந்த விழாவில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்,திமுக பொருளாளர் டி.ஆர். பாலு மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
டெல்லி : மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…
டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…
கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…
டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…