DMK MP Dayanidhi Maran [Imge source : X/@dayanidhi_maran]
டெல்லி: திமுக எம்பி தயாநிதி மாறன் இன்று நாடளுமன்றத்தில் விமான டிக்கெட் உயர்வு குறித்து மக்களவையில் கோரிக்கை முன்வைத்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூன் 23இல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2024-ஐ தாக்கல் செய்தார். அதற்கடுத்தடுத்த நாட்களில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார்கள்.
இன்று மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசுகையில், விமான டிக்கெட் உயர்வு பற்றி தெரிவித்தார். மேலும், தான் விமான டிக்கெட் புக் செய்யும் போது நிகழ்ந்த சம்பவத்தையும் குறிப்பிட்டுள்ளார். அதில், ” தான் வழக்கமாக டெல்லி வருவதற்கு ஆன்லைனில் விமான டிக்கெட் புக் செய்வேன்.
நான் தனியார் செயலி மூலம் டிக்கெட் புக் செய்ய முயன்றேன். அப்போது டிக்கெட் விலை 33 ஆயிரம் ரூபாய் என இருந்தது. நான் பணம் செலுத்தும் கட்டத்திற்கு வந்த உடன் சேவை நிறுத்தப்பட்டது. உடனே மீண்டும் முயற்சித்த போது டிக்கெட் விலை 93 ஆயிரமாக உயர்ந்துவிட்டது. சில நிமிடங்களில் 70 ஆயிரம் ரூபாய் உயர்ந்துவிட்டது. விமான நிறுவனங்கள் திடீர் திடீர் என விமான டிக்கெட் உயர்கிறது.” என திமுக எம்பி தயாநிதி மாறன் மக்களவையில் குற்றம் சாட்டினார்.
அப்போது விமானத்துறை அமைச்சர் ராம் மோகன், தயாநிதி மாறன் கூறிய விமான டிக்கெட் உயர்வு புகார் எடுத்துக்கொள்ளப்பட்டு, விமான டிக்கெட் உயர்வது கண்காணிக்கப்படும் என கூறினார்.
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…