DIWALI 2020: தீபாவளி எப்படி வந்துச்சு தெரியுமா .?அதன் சிறப்பம்சங்கள்.!

Published by
Ragi

தீபாவளி பண்டிகையானது நவம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது .

தமிழர்கள் முதற்கொண்டு அனைத்து மதத்தினரும்,பிற நாட்டவர் என பலரும் தற்போது தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர் . இந்தாண்டு நவம்பர் 14-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.  நராகசுரன் என்ற அரக்கன் இறந்த தினத்தை கொண்டாட தீபாவளி தினம் கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது . மனிதனாக இருப்பினும் துர்க்குணங்களையுடைய பூமாதேவியின் மகனான பவுமன் என்னும் நரகாசுரன் தேவர்கள் மற்றும் மக்களுக்கு பல கொடுமைகளையும், துன்பங்களையும் கொடுத்து வந்தான் . அவனது இம்சையை தாங்க இயலாத மகாவிஷ்ணு அவனை கொல்ல நினைக்கிறார் . ஆனால் அவர் பூமாதேவியின் மகன் என்பதால் அவரை தவிர யாராலும் கொல்ல முடியாது என்பதை புரிந்து தனது தந்திரத்தை பயன்படுத்தி போருக்கு அழைத்தார் .

நராகசுரன் மற்றும் மகாவிஷ்ணு இடையே போர் நடக்க , நரகாசுரன் அம்பு எய்தி மகாவிஷ்ணு மயக்கம் அடைவது போல் நடிக்கிறார் . அதனை பார்த்த பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமா நரகாசுரன் மீது அம்பு எய்து கொல்லப்பட்டான். அதப்போது நரகாசுரன் ஒரு வரம் கேட்கின்றான். பல கொடுமைகள் புரிந்த தீயவன் நான் இறந்துபோகும் இந்நாளை மக்கள் என்றென்றும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடவேண்டும் என்பதே என்று வரம் கேட்க , அசுரன் அழிந்து மகிழ்ச்சி அளிக்கும் நாளை தீபாவளியாக கொண்டாடப்படுவதாகக் கூறப்படுகிறது.இது போன்று பல கதைகள் தீபாவளிக்கு உண்டு .

பொதுவாக தீபாவளி பண்டிகையானது ஐப்பசி மாதம்தான் வரும்.  ஆனால் சில ஆண்டுகளில் அபூர்வமாக புரட்டாசி மாதமும் வருவதுண்டு . தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி மகாலட்சுமியை பூஜை செய்து தீபங்களை வீட்டில் பல இடங்களில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லுவார்கள்.

தீபாவளி தினத்தன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும் . வெந்நீரில் இருக்கும் கங்கை நம் பாவங்களைப் போக்குவார் என்று கூறப்படுகிறது. நரகாசுரன் கொல்லப்பட்ட தினம் என்பதால் எண்ணெய் தேய்த்து தலை மூழ்கி பாவங்களை போக்குவதாகவும் , அவரது இறந்த தினத்தை கொண்டாடுவதற்காக புத்தாடை உடுத்தியும் , பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுகின்றனர் . மேலும் தீபாவளி தினத்தன்று பெண்கள் சேலையும் , ஆண்கள் வேட்டி உள்ளிட்ட பாரம்பரிய உடைகளை உடுத்துவது வழக்கம் . அதே போன்று தீபாவளிக்கு இனிப்பு வகைகளான முறுக்கு,அதிரசம், சீடை , ரவா லட்டு,பணியாரம், வடை , பாயாசம், அல்வா உள்ளிட்ட அனைத்தும் வீட்டினுள் செய்து அதனை மறு வீட்டிற்கு கொடுத்து அன்பையும் ஒருவருக்கொருவர் பரிமாறுவார்கள் .

இந்தாண்டு தீபாவளியானது கொரோனா சூழல் காரணமாகவும், ஒரு சில இடங்களில் நிலவி வரும் காற்று மாசுபாடு காரணமாகவும் பட்டாசுகளை வெடிக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கொண்டாடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது .

Published by
Ragi

Recent Posts

அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!

அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!

டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…

24 minutes ago

நாளை தமிழக பட்ஜெட் : ஆய்வறிக்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…

56 minutes ago

“வெளியே வரல உள்ளயே வச்சு சுட்டுட்டாங்க”.. பாகிஸ்தான் ரயில் கடத்தலில் நடந்த திகில் சம்பவங்கள்!

இஸ்லாமாபாத் :  நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…

1 hour ago

“தொகுதி மறுவரையறையை ஏற்க முடியாது” மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்ற ரேவந்த் ரெட்டி.!

டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…

2 hours ago

ரெய்டை திசை திருப்ப இப்படி பண்றோமா? அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த துணை முதல்வர் உதயநிதி!

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…

2 hours ago

உங்கள் மகன்களுக்கு 2-வது மொழியா? பழனிவேல் தியாகராஜனுக்கு அண்ணாமலை கேள்வி!

சென்னை : மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர்…

3 hours ago