விவாகரத்து பெற்ற தம்பதியினர்! தங்களது வளர்ப்பு நாயை பிரிக்க மனமில்லாமல் அவர்கள் செய்யும் நெகிழ்ச்சியான செயல்!

Default Image

வளர்ப்பு நாயை பிரிக்க மனதில்லாமல் விவாகரத்து பெற்ற தம்பதியினர் செய்த அட்டகாசமான செயல்.

இன்று விவாகரத்து பெரும் பல தம்பதியினர் விவாகரத்து பெற்ற பின், நீ யாரோ, நான் யாரோ என்று சென்று விடுகின்றனர். ஆனால்,  மும்பையில், குழந்தை இல்லாத வங்கி பணியாளரும், அவரது மனைவியும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தெருநாய்கள் இரண்டை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப காரணங்களால் தற்போது சிறு பிரச்சினை ஏற்பட்டதால் கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் விவாகரத்து பெற்றனர். ஆனால் அவர்கள் வளர்த்து வந்த இரண்டு நாய்களையும் பிரிக்க விரும்பவில்லை.

இந்நிலையில் அந்த நாய்கள் இரண்டும் அவ்வளவு ஒற்றுமையாக பாசத்துடன் வளர்ந்ததால், அவர்கள் அதனை பிரிக்க விரும்பாமல் மாற்று யோசனையில் இறங்கினர். இதனை அடுத்து, ஒவ்வொரு வாரமும் நாயை வாரத்தில் மூன்று நாட்கள் வந்து பார்ப்பதோடு வெளியில் அழைத்துச் செல்லவும் நீதிமன்றத்திடம் அனுமதி  வாங்கியுள்ளனர். இவர்களது இந்தச் செயல் பார்ப்போரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்