பி.எம்.கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்காக விருப்பமுள்ளவர்கள் பி.எம். கேர்ஸில் நிதி அளிக்கலாம் என்று தெரிவித்தார். கொரோனா போன்ற திடீரென ஏற்படும் பேரிடர் பிரச்னைகளை சமாளிக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கவும் உருவாக்கிய இந்நிதியத்திற்கு, தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் நன்கொடை அளித்து உள்ளனர்.
இந்நிலையில், பி.எம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றக் கோரி, சி.பி.சி.எல் எனும் தனியார் தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தது. பின்னர் மனுதாரர் தரப்பில், பி.எம் கேர்ஸ் நிதிக்கு நன்கொடை அளிப்பவர்களைப் பற்றி எந்த சந்தேகம் இல்லை. ஆனால், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்துக்கு முரணாக பி.எம் கேர்ஸ் நிதி இருக்கிறது என்று கூறப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்தபோது தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்துக்கு முரணாக பி.எம்.கேர்ஸ் நிதி இருப்பதாக சிபிசிஎல் என்ற தனியார் தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…