மஹாராஷ்டிராவில் தற்போது சிவசேனா காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியில் முதலமைச்சராக பதவியேற்று உள்ளார். சமீபத்தில் நடந்த குளிர்கால சட்டசபை கூட்டத்தில் பயிர்க்கடன் தள்ளுபடியை அறிவித்தது. அந்த அறிவிப்பு படி 2015-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை விவசாயிகள் வாங்கிய ரூ.2 லட்சம் வரையிலான பயிர் கடன்களை தள்ளுபடி செய்யப்படும் எனஅறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சியான பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முழு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்குவோம் என கூறிவந்த சிவசேனா விவசாயிகளை ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டினர். இந்நிலையில் நேற்று புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார்.
அப்போது பேசிய உத்தவ் தாக்கரே , ஆட்சி அமைத்தவுடன் விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் அளிக்க வேண்டும் என கருதி ரூ. 2 லட்சம் வரை விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது விவசாயக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது” என தெரிவித்தார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…